Posts

Showing posts from 2020

மன்னார் பொழுதுகள் : சாபத்தின் வடுக்களை மீறி எழும் நட்பின் கதைகளும் குருதிக்கறைப் படிந்த மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களும்

Image
            “ஒரு சிறந்த நாவல் மிகவும் ஞானமிக்கதாக இருக்கிறது, சொல்லப்போனால், அதனைப் படைத்த நாவலாசிரியனை விடவும் அது கொஞ்சம் கூடுதல் புத்திசாலியாக இருக்கிறது. இந்த ஞானத்திலிருந்துதான் நம் வாழ்வுக்கு அர்த்தமூட்டும் அரிய கண்டுபிடிப்புகள் புலப்படுகின்றன. நமக்கான திசைகளும் வெளிகளும் புலப்படுகின்றன. கனவுகளின்றி பரிதவிக்கும் நம் காலத்துக்கான கனவுகளைப் பரிசளிக்கின்றன.” -       நாவல் கலை நூலில் சி.மோகன்.                இலக்கிய வடிவங்களில் நாவல் ஏன் மகத்தான வடிவமாய்க் கொண்டாடப்படுகிறதென்றால், அது வாழ்வைப் பிரதிபலிக்கிறது. வாழ்வின் மீதான பார்வைகளையோ விசாரணைகளையோ வெறுமனே அள்ளித் தெளிக்காமல் ஒரு எழுத்தாளன் முழுமையாய் தனது எண்ணவோட்டங்களின் வழியாய்த் தேடிச் சென்று வாழ்வின் புதிரான சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் தீர்வுகாண விழைகிறான். எல்லாவற்றைக் குறித்தும் அபிப்பிராயம்   எழுதுவதும் அனுபவத்தின் வழியாய் நாவல் எழுதுவதும் ஒன்றல்ல. இரண்டுவிதமான அனுபவங்கள் ஒரு நாவலசாரியனுக்கு முக்கியமானதாகப்படுகிறது, ஒன்று வாழ்வனுபவம். மற்றொன்று நீண்ட வாசிப்பு மற்றும் தேடலின் வழியாய் கிடைக்கப்பெறும் அனுபவம்.

கதைசொல்லி என்பவன் சாகசக்காரனோ வித்தைக்காரனோ அல்ல, அவனொரு மந்திரவாதி.

Image
( ம.நவீனின் போயாக்கை முன்வைத்து.)       சிறுகதை என்னும் வடிவம் ஒரு எழுத்தாளனுக்கு எப்போதும் சவாலானது, கடும் உழைப்பைக் கோருவது. ஒரு கதையிலிருந்து இன்னொரு கதைக்கான பயணத்தில்கூட எழுதுகிறவன் தன்னையும் தனது சிந்தனைகளையும்   முற்றிலுமாய் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம். வடிவரீதியாகவும் எடுத்துக் கொள்ளும் கதைக்களத்திலும் அக்கறை காட்டுகிறவர்களால் மட்டுமே தொடர்ந்து சிறந்த கதைகளை எழுத முடிந்திருக்கிறது. நாவல் எழுதுகையிலிருக்கும் சுதந்திரம் சிறுகதைகள் எழுதும்போது இருப்பதில்லை. ஒரு கதையை யோசித்த இடத்திலிருந்து எழுத்து வடிவத்திற்கு மாறும்போது அது வெவ்வேறு கிளைகளாகப் பிரிந்து செல்லும். இந்த உபகதைகள் எப்போதும் சுவாரஸ்யமானவை.   உபகதைகளிலிருந்து துண்டித்துக் கொண்டு கதைக்குள் ஆழமாகப் பயணிக்க லாவகம் வேண்டியிருக்கிறது. இந்த லாவகம் ஒரு சிறுகதை எழுத்தாளனுக்கு அத்தனை எளிதில் அமையக்கூடியதல்ல.             தமிழ் சிறுகதைகளின் முகமானது இந்த தசாப்தத்தில் பெரும் மாற்றம் கண்டுள்ளதை முதலில் குறிப்பிட விரும்புகிறேன். ஒரேவிதமான வாழ்க்கை முறை, ஒரேவிதமான நிலவியல் காட்சிகள், சலிப்பூட்டக்கூடிய வாழ்வின் பழைய அறங்கள

மூட்டைப்பூச்சி மனிதன்

Image
                                                                                                                                                                                    அனாமிகா       இன்று ஏனோ  வழக்கத்திற்கு மாறாக நிறைய குடிக்கிறேன் அறையெங்கும் மஞ்ஞு கவிழ்ந்த மாதிரி புகைச்சுருள்கள் வெவ்வேறு வடிவம் பூண்டு மெதுமெதுவாய் கலைந்து போகின்றன.ஆஸ்ட்ரேவில் நிறைய சிகரெட் துண்டுகள் ஒவ்வொரு நீளத்தில் எரிந்தடங்கியச் சாம்பலில் கிடக்கின்றன.அறை தூய ஒழுங்கின்மையில் அழுக்கோடு சிதறி இருக்கின்றது. கால அலைவரிசைப்படி இரவு மாறிக்கொண்டிருக்கின்றது. ஒன்றுரெண்டு மூட்டைப்பூச்சிகள் வெளிச்சம் இருளை ஔிந்துகொள்ளச்செய்த நிழல் தடத்தில் நுழைகின்றன.என் வயிற்றினுள் எப்போழ்தும் தீராத பசியின் உமிழ்நீர் சுரந்தபடி இருக்கின்றது. குடல்களை தின்றுகொண்டிருக்கிற பசி எவ்வளவு தின்று தீர்த்தாலும் சாகும்வரை அடங்காத மிருகம். என் அருகில் பெரியதொரு வட்டமேசையில் நீலநிற ஞெகிழி விரிப்பிற்குமேல் போத்திறைச்சியின் கஷ்னங்கள் ஒரு பழைய சீனத்துப்பீங்கான் தட்டில் மிச்சம் இருந்தன. உள்ளங்கை முழுவதும் வாரியெடுத்த துண்டங்களை போதையில் வாய் முழு