Posts

Showing posts from February, 2013

சொல்வனம் இணைய இதழில் கிருஷ்ண பிரபு எழுதி இருக்கும் மதிப்புரை.

Image
உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார் கிருஷ்ண பிரபு  |  இதழ் 81  | 28-01-2013|    அச்சிடு நீல வானின் திட்டுத் திட்டான வெண்மேகங்கள் அங்குமிங்கும் கொட்டிக் கிடப்பதைப் போலவே, நகரம் சார்ந்த மனித உறவுகள் தேவைக்கதிகமான இடைவெளியில் உருக்கொண்ட தனித் தீவுகள் போல் சிதறிக் கிடக்கின்றன. எவ்வளவிற்கு எவ்வளவு இருப்பிடங்கள் குறுகியதாகவும் நெருக்கமானதாகவும் இருக்கின்றனவோ, அவ்வளவுக்கு நேரெதிர் முரணாக சகமனித இடைவெளி என்பது சமுத்திரம் போல் நீள்கிறது. அருகில் இருந்தும் அன்னியர்களே என்ற மன நிலையை நகரங்கள் சுலபமாக ஏற்படுத்தி விடுகின்றன. ஆகவேதான் நகர மனிதர்கள் தம்மை நிலை நிறுத்திக்கொள்ள மனிதம் கடந்த எல்லைக்குச் செல்வதற்குக் கூட தயங்குவதே இல்லை. என்றாலும் வாழ்வின் கோரத்தை வெளிப்படுத்தும் அதே அயோக்கிய முகங்கள்தான் அன்பின் ஊற்றையும் சுரக்கின்றன. போலித்தனங்களால்தான் சமூக இருப்பானது நிலைக்கும் என்று வரும்பொழுது எமாற்றுக்காரர்களையும், ஜேப்படித் திருடர்களையும், போக்கிரிகளையும், ஊழல்வாதிகளையும், குண்டர்களையும், சமூக விரோதிகளையும் உலகமானது சந்தித்தே ஆக வேண்டும். எனினும் அவர்களும் சமூகத்தின் அங்கமாகத்தானே வாழ்ந்தா

காலச்சுவடு இந்த இதழில் உப்பு நாய்களுக்கு காசி மாரியப்பன் எழுதியிருக்கும் மதிப்புரை

Image
காத்திரமான விளிம்புநிலை நாவல் க . காசிமாரியப்பன் ஜி . நாகராஜனும் ஜெயகாந்தனும் இருளில்புழங்குவோரை அச்சுக்குக் கொண்டுவந்தா h; கள் நாஞ்சில்நாடன் ‘ எட்டுத்திக்கும்மதயானை ’ யைச் செலுத்தினார ;. பகல்வாராப் பெண்களை இமயத்தின் ஆறுமுகம் கண்டார ;. இன்னும் சிலா ; முயன்றனா ;. மாறிவரும் பொருளியல்பண்பாடும் உலகளாவியஅதிகாரமும் தொழில்விரிவும் குற்றவுணா ; வுகளைககுறைத்த மட்டுமீறிய பணப்புழக்கமும் நடப்பு வாழ்வின் பாதகங்களைப் பெருக்கிவிட்டன . இத்தகைய நவீனவாழ்வின் பா p மாணங்களை ஜெயகாந்தனிடமோ நாகராஜனிடமோ காணமுடியாது . குற்றம் , உடலரசியல் பின்புலத்தை உட்சொ p த்த மையமானநோக்கமும் அவா ; களுக்கில்லை . லகூ ; மி சரவணக்குமாரின் எழுத்து மேற்சொன்னவற்றின் மேல்நின்று காண்பதால் தனித்துத் துலங்குகிறது . பெருநகரவெளியில் நிகழும் குற்றங்களையும் வாதைகளையும் காத்திரமாக முன்வைக்கும் லகூ ; மி சரவணக்குமாரின்   ‘ உப்பு நாய்கள் ’ பதைபதைப்பையும் பெருஞ்சலனத்தையும் மனத்தில் உண்டாக்குகிறது : வசீகரமான நகா ; சார ; மொழியும் நாவலில் வெளிப்படும் வாழ்க்கையும் தரும் சஞ்சலம் .