Posts

Showing posts from 2013

3. ரகசிய இரவு…. ரகசிய நண்பன்…

இருள் நிரப்பிய வெளியெங்கும் இடைவெளியின்றி விளக்குகளின் வெளிச்சமப்பி செம்பழுப்பு நிறமாக்கியிருந்தது. ரயிலின் வேகத்தில் சலனங்கொள்ளும் ஸ்டேசன்கள் உறங்கத் தயாராகிக்கொண்டிருந்தன. அந்தப்பெண் இவனைக் கவனிக்கிறாளாவெனப் பார்த்தான். அவள் தன் அலைபேசியில் யாருடனோ பேசிக்க்கொண்டிருந்தாள். பேச்சைவிடவும் மிகுந்திருந்த்து சிரிப்பு. திரிசூலம் ஸ்டேசனில் வண்டி நின்ற பொழுது இவனிருக்கும் பெட்டியில் ஏறிக்கொண்ட ஒன்றிரண்டு பேரில் முப்பதைத் தாண்டிய ஒருவன் மட்டும் சம்பத்திற்கு அருகில் வந்து அமர்ந்தான். அதிகபட்சமாய் இருவருக்குமிடையில் இருந்த இடைவெளி ஒரு மீட்டர்தான். இவன் முகத்தை படியில் ஏறும்போதே கவனித்துவிட்டவன் தீர்மானிக்கப்பட்டு  விட்டதைப்போல் நேராய் இவனருகில் வந்துவிட்டான். வழக்கமாக இந்நேரத்திற்கு சம்பத் வீட்டிற்குப் போயிருப்பான். இன்று பெருங்களத்தூரில் ஒரு பார்ட்டி கொஞ்சம் கூடுதல் சரக்கு கேட்டதற்காய் கொடுக்கப்போகிறவனுக்கு திரும்பிச் செல்லும் நேரம் பற்றின தெளிவில்லை. புதிதாக வந்தமர்ந்தவனின் முகத்தில் அந்த நேரத்திற் கு கொஞ்சமும் தொடர்பில்லாத   மட்டுமீறியதொரு ஒப்பனையிருந்தது. வலதுகாதில் கம்மல் அணிந்திருந்

உப்பு நாய்கள் நாவலின் முதல் பகுதி....

1 . கண்ணாடி ரயில் ...                                     வேறு எந்த பெருநகரிலும்  இல்லாததொரு தனித்துவமிக்க ரயில்நிலைய ங்கள் இந்த ஊரிலிருக்கி ன்றன . கண்ணாடித்தாள்கள் கொண்டு சுற்றப்பட்ட அந்த ரயில்நிலையத்தின் நடைபாதையில் பகல் வேளைகளில் முழங்கால்வரை தொங்கும் ரெக்ஸின் பேக்குகளும், உடல் இறுக்கி பிதுங்கிக் கிடக்கும் ஜீன்ஸுகளுமணிந்த யுவதிகள், மென்னுடல் கொண்ட இளைஞர்களுடன்  முழுநாளும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களை பொருட்படுத்தியும் பொருட்படுத்தாமலும் கடந்துபோகிறவர்களுக்கென்றே  பிளாஸ்டிக் தாள்களில் அடைக்கப்பட்ட கேக்குகள்,தண்ணீர் பாட்டில்கள் மடக்கி வாசிக்க ஏதுவான வார சஞ்சிகைகளென வாங்குதற்கு கொஞ்சம் யூஸ் அண்ட் த்ரோ சமாச்சாரங்களும் விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை ரயிகள் வந்துபோகும் இந்த நிறுத்தத்தின் ஒரு புறத்தில் செய்ண்ட் ஜார்ஜ் கோட்டையும் இன்னொரு புறத்தில் பழைய மத்திய சிறைச்சாலையும் அரணாக நி ற்கின் றன. ரயில் நிலையத்தினுள் சின்ன சின்னதாய்க் கடைகள் இப்பொழுது நிறைய வந்திருப்பதுடன் வெளியே வாசலையொட்டியே நிறைய பழக்கடைகளுமிருக்கின்றன.  முன்பு தண்ணீர் பாக்கெட

வசுந்தரா என்னும் நீலவர்ணப் பறவைக்கு ஊடகவியலாளர் சுகிதா எழுதியிருக்கும் விமர்சனம்.

Image
எழுத்து சார்ந்த புரிதலும் .... எழுத்தாளர் சார்ந்த புரிதலும் படைப்புக்கான வெற்றியை தீர்மானிக்கின்றன... வாசகனுக்கு எழுத்தாளன் சார்ந்த புரிதல் தேவைப்படாது...ஆனால் எழுத்து சார்ந்த புரிதல் வேண்டும் ....இந்த இரண்டும் எனக்கு வாய்த்திருக்கிறது நண்பன் என்ற முறையில் லஷ்மையை நன்கறிவதால் .... ஒவ்வொரு பத்தாண்டிலும் சிறுகதையின் போக்கு திசைமாற்றம் கொள்கிறது. புதுமைபித்தனின் துவங்கி இன்று எழுதிக் கொண்டிருக்கும ் இளம்படைப்பாளி வரை சிறுகதை அடைந்துள்ள மாற்றமும் வளர்ச்சியும் அபரிமிதமானது. இரண்டாயிரத்திற்கு பிறகு எழுதத் துவங்கிய இளம் எழுத்தாளர்களில் பலர் நல்ல சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு என தனித்துவமான கதை சொல்லும் முறையும் கதைக்களமும் இருக்கிறது. . அந்த வரிசையில் லஷ்மியின் கதைகளில் புனைவுகளை தாண்டி இயல்புகள் ஆங்காகங்கே துருத்திக் கொண்டு நிற்கின்றன. இன்றைய சிறுகதையின் பலம் அதன் கதை சொல்லும் முறை. இந்ததொகுப்பில் அப்படி மாறுபட்ட கதை சொல்லும் முறைகளும் கதைமொழியும் காணமுடிகிறது. கதையை படிக்கும் சில நேரங்களில் நானே அப்பாத்திரமாக மாறினேன்... குறிப்பாக அத்தை கதை என் ஊரில் எனக்கு நேர்ந்த அதே திருவ

வலசையில் வெளியான கதை...

முதல் தகவல் அறிக்கை. லக்‌ஷ்மி சரவணக்குமார்.       க/எ 108/ 66 நாதமுனி தெருவில் வசித்து வந்த (லேட்) பெரியமாயத் தேவரின் மனைவியான திருமதி.ஒச்சம்மாள் ( வயது 76 ) கடந்த 14.7.2008 அன்று அதே தெருவில் மேற்கண்ட இலக்கத்தில் இருக்கும் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் கேள்விப்பட்டு 15. 7. 2008 காலை ஆறு மணியளவில் தலமைக் காவலர்கள் அ.சுப்பிரமணி மற்றும் ரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அப்பொழுதுதான் வீட்டுக் கதவை உடைத்து இறங்கி இருந்தார்கள்.   கிழவி நல்ல கருத்த தேகம், பல் இன்னும் வலுவாய் இருக்கிறது. செத்து நீண்ட நேரமாகியிருந்ததில் நாக்கு நீலமாகிவிட்டது.   இது விசயமாய் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் வழக்கு 15.7.2008 அன்று பதிவு செய்யப்பட்டது.   திருமங்கலம் நகர் அரசு மருத்துவர்கள் திரு . எஸ்.அழகன் மற்றும் திருமதி மணிமேகலை ஆகியோரின் பிரேத பரிசோதனை மற்றும் தீவிர விசாரணைக்குப் பிறகு ஒச்சம்மாள் அவர்களின் மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கைகள் பின்வருமாறு. ( பிரேத பரிசோதனை அறிக்கை தனியாக இணைக்கப்பட்டுள்ளது.) இதுவிசயமாய் உதவி காவல்