Posts

Showing posts from June, 2017

தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியான நேர்காணல்.

Image
“இந்திய அரசின் விருது கிடைத்ததைவிட, அதைத் திருப்பி அனுப்பிய போதே நான் உற்சாகமடைந்தேன்!” இளம் எழுத்தாளர் இலட்சுமி சரவணக்குமார் செவ்வி! ஏறுதழுவல் உரிமையைப் பறித்த இந்திய அரசைக் கண்டித்து, தனக்கு அளிக்கப்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கான சாகித்திய அகாதெமியின் “யுவபுரஸ்கர்” விருதைத் திருப்பி அளித்து, எழுத்துலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இலட்சுமி சரவணக்குமார். தமிழர் கண்ணோட்டம் இதழுக்காக அவரை நேரில் சந்தித்தோம்! இனி அவருடன்… த.க : வணக்கம் திரு. சரவணக்குமார்! முதலில் யுவபுரஸ்கார் விருதைத் திருப்பி அளித்தமைக்காக எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்! குமார் : மிக்க நன்றி! த.க : உங்களைப் பற்றிய சிறு அறிமுகம்? குமார் : எனது சொந்த ஊர் மதுரை அருகிலுள்ள திருமங்கலம். 2006ஆம் ஆண்டிலிருந்து சென்னையில் வசக்கிறேன். பதினோறாம் வகுப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டவன் நான். இப்பொழுது, முழுநேர எழுத்தாளன்.   த.க : எழுத்துலகில் மிகவும் மதிக்கத்தக்க சாகித்திய அகாதெமியின் இளம் எழுத்தாளர்  விருதை, உங்கள் “கானகன்” நாவல் பெற்றுள்ளது. சூழலியல் பாதுகாப்பு சார்ந்த அந்த நாவலுக்கான