Posts

Showing posts from June, 2013

3. ரகசிய இரவு…. ரகசிய நண்பன்…

இருள் நிரப்பிய வெளியெங்கும் இடைவெளியின்றி விளக்குகளின் வெளிச்சமப்பி செம்பழுப்பு நிறமாக்கியிருந்தது. ரயிலின் வேகத்தில் சலனங்கொள்ளும் ஸ்டேசன்கள் உறங்கத் தயாராகிக்கொண்டிருந்தன. அந்தப்பெண் இவனைக் கவனிக்கிறாளாவெனப் பார்த்தான். அவள் தன் அலைபேசியில் யாருடனோ பேசிக்க்கொண்டிருந்தாள். பேச்சைவிடவும் மிகுந்திருந்த்து சிரிப்பு. திரிசூலம் ஸ்டேசனில் வண்டி நின்ற பொழுது இவனிருக்கும் பெட்டியில் ஏறிக்கொண்ட ஒன்றிரண்டு பேரில் முப்பதைத் தாண்டிய ஒருவன் மட்டும் சம்பத்திற்கு அருகில் வந்து அமர்ந்தான். அதிகபட்சமாய் இருவருக்குமிடையில் இருந்த இடைவெளி ஒரு மீட்டர்தான். இவன் முகத்தை படியில் ஏறும்போதே கவனித்துவிட்டவன் தீர்மானிக்கப்பட்டு  விட்டதைப்போல் நேராய் இவனருகில் வந்துவிட்டான். வழக்கமாக இந்நேரத்திற்கு சம்பத் வீட்டிற்குப் போயிருப்பான். இன்று பெருங்களத்தூரில் ஒரு பார்ட்டி கொஞ்சம் கூடுதல் சரக்கு கேட்டதற்காய் கொடுக்கப்போகிறவனுக்கு திரும்பிச் செல்லும் நேரம் பற்றின தெளிவில்லை. புதிதாக வந்தமர்ந்தவனின் முகத்தில் அந்த நேரத்திற் கு கொஞ்சமும் தொடர்பில்லாத   மட்டுமீறியதொரு ஒப்பனையிருந்தது. வலதுகாதில் கம்மல் அணிந்திருந்

உப்பு நாய்கள் நாவலின் முதல் பகுதி....

1 . கண்ணாடி ரயில் ...                                     வேறு எந்த பெருநகரிலும்  இல்லாததொரு தனித்துவமிக்க ரயில்நிலைய ங்கள் இந்த ஊரிலிருக்கி ன்றன . கண்ணாடித்தாள்கள் கொண்டு சுற்றப்பட்ட அந்த ரயில்நிலையத்தின் நடைபாதையில் பகல் வேளைகளில் முழங்கால்வரை தொங்கும் ரெக்ஸின் பேக்குகளும், உடல் இறுக்கி பிதுங்கிக் கிடக்கும் ஜீன்ஸுகளுமணிந்த யுவதிகள், மென்னுடல் கொண்ட இளைஞர்களுடன்  முழுநாளும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களை பொருட்படுத்தியும் பொருட்படுத்தாமலும் கடந்துபோகிறவர்களுக்கென்றே  பிளாஸ்டிக் தாள்களில் அடைக்கப்பட்ட கேக்குகள்,தண்ணீர் பாட்டில்கள் மடக்கி வாசிக்க ஏதுவான வார சஞ்சிகைகளென வாங்குதற்கு கொஞ்சம் யூஸ் அண்ட் த்ரோ சமாச்சாரங்களும் விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை ரயிகள் வந்துபோகும் இந்த நிறுத்தத்தின் ஒரு புறத்தில் செய்ண்ட் ஜார்ஜ் கோட்டையும் இன்னொரு புறத்தில் பழைய மத்திய சிறைச்சாலையும் அரணாக நி ற்கின் றன. ரயில் நிலையத்தினுள் சின்ன சின்னதாய்க் கடைகள் இப்பொழுது நிறைய வந்திருப்பதுடன் வெளியே வாசலையொட்டியே நிறைய பழக்கடைகளுமிருக்கின்றன.  முன்பு தண்ணீர் பாக்கெட