Posts

Showing posts from April, 2013

வலசையில் வெளியான கதை...

முதல் தகவல் அறிக்கை. லக்‌ஷ்மி சரவணக்குமார்.       க/எ 108/ 66 நாதமுனி தெருவில் வசித்து வந்த (லேட்) பெரியமாயத் தேவரின் மனைவியான திருமதி.ஒச்சம்மாள் ( வயது 76 ) கடந்த 14.7.2008 அன்று அதே தெருவில் மேற்கண்ட இலக்கத்தில் இருக்கும் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் கேள்விப்பட்டு 15. 7. 2008 காலை ஆறு மணியளவில் தலமைக் காவலர்கள் அ.சுப்பிரமணி மற்றும் ரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அப்பொழுதுதான் வீட்டுக் கதவை உடைத்து இறங்கி இருந்தார்கள்.   கிழவி நல்ல கருத்த தேகம், பல் இன்னும் வலுவாய் இருக்கிறது. செத்து நீண்ட நேரமாகியிருந்ததில் நாக்கு நீலமாகிவிட்டது.   இது விசயமாய் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் வழக்கு 15.7.2008 அன்று பதிவு செய்யப்பட்டது.   திருமங்கலம் நகர் அரசு மருத்துவர்கள் திரு . எஸ்.அழகன் மற்றும் திருமதி மணிமேகலை ஆகியோரின் பிரேத பரிசோதனை மற்றும் தீவிர விசாரணைக்குப் பிறகு ஒச்சம்மாள் அவர்களின் மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கைகள் பின்வருமாறு. ( பிரேத பரிசோதனை அறிக்கை தனியாக இணைக்கப்பட்டுள்ளது.) இதுவிசயமாய் உதவி காவல்

வசுந்தரா தொகுப்பில் வந்திருக்கும் ஒரு கதை... எனக்கு விருப்பமானது.

                                                                                ஆரஞ்ச்…      இப்படியானதொரு வேலையாயிருக்குமென தெரிந்திருந்தால் மணி கொஞ்சம் யோசித்துத்தான் வந்திருப்பான். சினிமா சூட்டிங் என்றதும் ஆசையில் அத்தனை உருப்படிகளையும் அள்ளிப் போட்டுக்கொண்டு ஓடிவந்தது எத்தனை தப்பாய் போனதென இப்பொழுதுதான் புரிந்தது அவனுக்கு. எடுத்ததையே எத்தனைமுறைதான் எடுப்பார்கள். உருப்படிகள் அவ்வளவும் வெயிலுக்கு வெறியேறிப் போய்க் கிடந்தன. வழக்கத்தை விட அதிகமான சீற்றம். எல்லாத்தையும் பெட்டிக்குள் வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது. போதாக்குறைக்கு மகனையும் கூட்டி வந்து அவனும் பாவம் உருப்படிகளையும் மேய்க்க முடியாமல், வெயிலில் நிற்கவும் முடியாமல் நெளிந்து கொண்டிருந்தான். பத்து வயதுதான் ஆகிறது. ஆனாலும் சுருத்தான பயல், தனக்குப் பிறகு உருப்படிகளைப் பார்த்துக் கொள்ள ஒருவன் இருக்கிறானென அவனைப் பார்த்து நம்பிக்கையாகவும் சந்தோசமாகவும் இருக்கும் மணிக்கு. கடைசியாய் ஆறு மாதத்திற்கு முந்தி வந்த ’ஆரஞ்ச்சோடு’ சேர்த்தால் மணியிடம் பதிமூன்று உருப்படிகள் தேறும். இன்னைக்குத் தேதியில் பாம்பு வித்தை காட்டும்

எங்களது சிறிய நகரில் இப்பொழுது கடவுளர்கள் இல்லை

     …   தமிழ் சினிமா ரசிகமனோபாவத்தில் நுழையும் சாதி அரசியல்.                 உலகின் வேறெங்கும் இல்லாத எவ்வளவோ அம்சங்கள் தமிழ் சினிமாவில் மட்டுமே பிரத்யேகமாக இருக்கும். நாயகியுடன் பாடும் முதலிரவு பாடல் காட்சியில் ஐம்பது பெண்கள் உடன் ஆடுவார்கள், ஏன் எதற்கென்று நாம் ஒருபோதும் கேட்க முடியாது. நாயகன் சோற்றுக்கு இல்லாத பரதேசியாய்க் காட்டப் படுவான், ஆனால் டூயட் பாடுவது மட்டும் நிச்சயம் ஏதாவது வெளிநாட்டு லொக்கேஷனாகத்தான் இருக்கும். இப்படித் தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் செய்கிற எவ்வளவோ விசயங்களை நாம் இன்னும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்போதைக்கு இவற்றையெல்லாம் மன்னித்து விட்டாலும் ஒரு விசயத்தில் மிக அவசரமாக அல்லது அத்யாவசியமாக நாம் இவர்களை மாற்றச் செய்ய வேண்டும். வேறு எந்த மொழியிலும் இவ்வளவு தூரத்திற்கு நாயகர்களின் வழிபாடு இருக்குமா என்பது சந்தேகம். முன்னூறு அடிக்கு கட் அவுட்கள், பாலபிசேகம், இன்னும் பார்த்தாலே பதைபதைக்கும் எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன. சரி ஏன் இவ்வளவையும் ஒரு சராசரி ரசிகன் செய்து கொண்டிருக்கிறான்? இதற்குப் பின்னாலிருப்பது வெறுமனே அந்நாயகர்களின் படங்க