3. ரகசிய இரவு…. ரகசிய நண்பன்…



இருள் நிரப்பிய வெளியெங்கும் இடைவெளியின்றி விளக்குகளின் வெளிச்சமப்பி செம்பழுப்பு நிறமாக்கியிருந்தது. ரயிலின் வேகத்தில் சலனங்கொள்ளும் ஸ்டேசன்கள் உறங்கத் தயாராகிக்கொண்டிருந்தன. அந்தப்பெண் இவனைக் கவனிக்கிறாளாவெனப் பார்த்தான். அவள் தன் அலைபேசியில் யாருடனோ பேசிக்க்கொண்டிருந்தாள். பேச்சைவிடவும் மிகுந்திருந்த்து சிரிப்பு. திரிசூலம் ஸ்டேசனில் வண்டி நின்ற பொழுது இவனிருக்கும் பெட்டியில் ஏறிக்கொண்ட ஒன்றிரண்டு பேரில் முப்பதைத் தாண்டிய ஒருவன் மட்டும் சம்பத்திற்கு அருகில் வந்து அமர்ந்தான். அதிகபட்சமாய் இருவருக்குமிடையில் இருந்த இடைவெளி ஒரு மீட்டர்தான். இவன் முகத்தை படியில் ஏறும்போதே கவனித்துவிட்டவன் தீர்மானிக்கப்பட்டு  விட்டதைப்போல் நேராய் இவனருகில் வந்துவிட்டான். வழக்கமாக இந்நேரத்திற்கு சம்பத் வீட்டிற்குப் போயிருப்பான். இன்று பெருங்களத்தூரில் ஒரு பார்ட்டி கொஞ்சம் கூடுதல் சரக்கு கேட்டதற்காய் கொடுக்கப்போகிறவனுக்கு திரும்பிச் செல்லும் நேரம் பற்றின தெளிவில்லை. புதிதாக வந்தமர்ந்தவனின் முகத்தில் அந்த நேரத்திற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத  மட்டுமீறியதொரு ஒப்பனையிருந்தது. வலதுகாதில் கம்மல் அணிந்திருந்தான். அவ்வப்போது படியைப் பார்த்துக் கொண்டான். கைக்குட்டையால் முகத்தையும் கழுத்தையும் துடைத்துக் கொள்வதும் ஒத்தி எடுத்துக்கொள்வதுமாயிருந்தான். வாசலையொட்டி நின்றிருந்த இளைஞனொருவன் இவனைப் பார்த்து சிரித்தான். சம்பத் எழுந்து கொள்ள நினைத்தான், அவனுக்கு இது புதிதில்லை. ஆனாலும் இப்பொழுது இணங்கமுடியாத தயக்கம் சின்னதொரு குழப்பத்திற்குப் பின் எழுந்துகொள்ளாமல் அப்படியே உட்கார்ந்து கொண்டான். ’நீங்க தாம்பரம் போறிங்களா?’ சம்பத் தான் பேசத்துவங்கினான். அருகிலிருந்தவனுக்கு இவன் தன்னைப் புரிந்துகொண்டான் என்கிற திருப்தி முகத்தில். வெறுமனே ஆமென்று தலையை ஆட்டினான்.  இன்னும் நெருங்கி உட்கார வந்தவனை ‘தாம்பரம் வரக்காட்டி வெய்ட் பன்னுபா’  அவன் இருந்த இடத்திலேயே உட்கார்ந்திருந்தான்.  எதுவும் பேசிக்கொள்ளாமலேயே எதிரெதிர் ஜன்னல்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களிருவருக்குமான இடைவெளியில் பெருங்காமத்தின் ஈரம் நிலையின்றி அலைந்து கொண்டிருக்க இருவரின் கண்களும் உடலின் நெருப்பினைச் சுமந்து கொண்டிருந்தன.  வாசலையொட்டி நின்றிருந்த இளைஞன் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டான். தாம்பரம் வந்து சேர்ந்த பொழுது பயணிகளை இறக்கிவிட்ட ரயில் அனாதயாய் நின்றிருந்தது. ஒரு மொத்த தினத்தின் வெக்கையையும் குடித்த இரும்பு உடலாய் விளக்குகளணைக்கப்பட்ட ரயிலின் எஞ்சின் சத்தம் மட்டும் உறுமிக் கொண்டிருந்தது.
            தண்டவாளத்தை ஒட்டியே நடந்து வந்த இருவரும் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பாலத்துப்பக்கமாய்  வந்து நின்றனர். முன்பு அடர்ந்த இருளப்பிக்கிடக்கும் அவ்விடம் இப்பொழுது சோடியம் விளக்குகளின் வெளிச்சத்தில் நிரம்பியிருந்தது. தன்னை அழைத்து வந்தவனின் உடலில் சின்னதொரு நடுக்கமிருப்பதைப் சம்பத் பார்த்தான். புதிதாக இதற்கு பழக்கப்பட்டவனாயிருக்கலாம்.  ‘உனக்கு வீடு எங்க தாம்பரமா?’      சம்பத்தின் முகத்தை அவன் பார்க்கவில்லை, ‘இல்ல, குரோம்பேட்... வார்த்தையை முழுங்கியதிலிருந்து பேசத்தயங்குகிறானோ எனத் தோன்றியது. விரல்கள் நடுங்கும் பரபரப்போடு சம்பத்தின் தோளையும் முதுகையும் தடவினான். உடனடியாக எல்லாவற்றையும் அனுபவித்துவிடும் பரபரப்பு. கண்கள் நிலைத்திருக்க முடியாமல் திணறின. சம்பத் விடுவதாயில்லை. யாரென்று தெரியாத ஒருவனோடு  நினைத்த மாத்திரத்தில் கூடிக்கலைகிற மனநிலையில்லை அவனுக்கு. முதுகிலிருந்து அவன் கையை விலக்கியவன் ‘உனக்கு கல்யாணமாகிடுச்சா?சம்பத்தின் முதுகிலிருந்து கையை எடுத்தவன் ‘இதெல்லாம் ஏன் கேக்கறீங்க?...முகத்தைச் சுளித்தான். சொன்னா ஓகே... இல்லாக்காட்டி வேற யார்னாச்சும்  பாரு...அவனை விலக்கி நடக்க எத்தனித்தான். சற்றுத் தள்ளி எரிந்து கொண்டிருந்த விளக்குகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் பேரு முத்துராம். கல்யாணமாகி ஒரு பொண்ணு இருக்கா...இப்போதான் எல்.கே.ஜி. வீடு தாம்பரத்துலதான் இருக்கு...   இப்போ உங்க பூளக்காட்டுவிங்களா?...யாரிடமோ பேசுவதுபோல் பேசி நின்றான். சம்பத் திரும்பி அவனைப் பார்த்தான். இவனால் சிரிக்க முடிந்தளவிற்கு அவனால் சிரிக்கமுடியவில்லை. நெடுஞ்சாலை மிக அருகிலிருந்ததால் பேருந்துகளின் பேரிரைச்சல் இருவரையும் மெல்லிய குரலில் பேச அனுமதித்திருக்கவில்லை. தலையைக் குனிந்து சம்பத் நெருங்கி வரக் காத்திருந்தான். ‘என் பேர் சம்பத்...தண்டையார்பேட்டைல வீடு...அவன் ம் கொட்டினான் பதிலுக்கு. இந்த விவரங்கள் தனக்குத் தேவையற்றதொன்று என்பதின் வெளிப்பாடே அது. ’நீ கப்பா...சொம்பா..?அவன் ரொம்பநேரத்திற்குப் பின் இப்பொழுதுதான் நிமிர்ந்து சம்பத்தைப் பார்த்து சிரித்தான். ‘சொம்பு...பதிலில் சந்தோசமும் நானமுமிருந்தது. ’சொம்ப அடிக்கிறதுன்னா எனக்கு ஆவாதுபா.... கப்படிக்கத்தா  புடிக்கும்...ஒன்னியும் அவ்சரம் இல்லன்ன ஃபர்ஸ்ட்டு  கப்படிச்சிடறேன்...அப்பால  சொம்படிக்கிறேன்...’   சம்பத்துக்கு எதிரிலிருந்தவனின் அனுமதி தேவையாயிருந்திருக்கவில்லை. சொல்லிக்கொண்டே தன் பேண்ட்டை தளர்வாக்கினான். சம்பத்தை நெருங்கி வந்த முத்துராம், ‘இங்க வேணாம் ரொம்ப வெளிச்சமா இருக்கு...கொஞ்சம் தள்ளிப் போகலாம்...கூட்டிக்கொண்டு பாலம் முடிகிற இடத்திற்குப் போனான். இருளுக்குள் அவர்களின் உருவங்கள்  மிதந்து செல்லும் நிழல்களாகியிருந்ததன.
                   முத்துராமின் கழுத்துக்குக் கீழிருந்த சற்றே பெரிதான மச்சத்தினை அவன் குனிந்து சம்பத்தின் கால்களுக்கிடையில் உட்காரும்போதுதான் சம்பத் கவனித்திருந்தான். கழுத்தோடு சேர்த்து பிணைத்து தன் ஜிப்பைத் திறக்க அவனுக்கு உதவினான். இவன் முகத்தினை நிமிர்ந்து பார்க்கும் ஆர்வமோ மேலதிகமான வார்த்தைகளெதையும் பேசவிழைகிற எண்ணமோ இல்லாதவனாய் கைகளால் சம்பத்தின் உடலைத் தூண்டி எரியச் செய்துகொண்டிருந்தான்.   கண்களில் மெல்லியதொரு குளிர்ச்சி மலர அவனைப் பார்க்க உடலின் சகல நரம்புகளும் மெல்ல விழித்து முருக்கேறியது. அவன் நாவிலும் கன்னங்களின் ஓரத்திலும் புகுந்து வெளியேறிய எச்சில் குடித்த கருங்கொம்பு அந்த அகால வெளியில் இவர்களிருவரையும் அந்த இடத்தின் இயல்பை மீறி சந்தோசங்கொள்ள வைத்திருந்தது. தன்னை உறிந்து கொண்டிருப்பவனின் உடல் விருப்பமான வளைவுகளோடு இவன் முன்னால் முன்னும் பின்னுமாய் இயங்கிக் கொண்டிருப்பதை பார்த்தபடி பாலத்தின் சுவற்றில் சாய்ந்தான். இருவரும்  சேமித்து வைத்திருந்த மெளனத்தில் இரவு அழகானதொரு மலராய் மலர்ந்திருந்தது. சம்பத் தனக்கு விருப்பமானதொரு காதல் பாடலை பாட விரும்பினான். கொஞ்சம் அபத்தமாய்த் தோன்றும் இதுமாதிரியான யோசனைகள் ஒரு தனிமனிதனின் சந்தோசம் என்பதன் முன்னால் எந்த தயக்கங்களையும் கொண்டுவர முனைவதில்லை. பாடல் வரிகளெதுவுமில்லாமல் வெறுமனே மெல்லியதொரு முனகலில் ஒரு பாடலை முனகினான். தலையை இவனின் காலிடுக்கிலிருந்து விலக்கி இவனை நிமிர்ந்து பார்த்த ராம் ‘போதுமா?..ஆர்வமாய்க் கேட்டதிலிருந்து அவன் சொம்படிக்க தவித்துக் கிடப்பது புரிந்தது இவனுக்கு.  சிரித்தபடியே போதுமென்றவன் அவன் பேண்ட்டை உருவியெறிந்து குனியச் செய்தான். அவனுடல் விருப்பத்துடன் தன்னை புணரத்தரும் ஒரு காதலியின் சூட்சுமங்களோடு நெளிந்து இவனுக்கான வாசலைக் காட்டியது. சம்பத்தின் அசைவுகளுக்குத் தகுந்தாற்போல் தன்னையும் அசைத்துக் கொடுத்தவன் மெல்லிய கெட்ட வார்த்தைகளால் இவனை இன்னும் இன்னுமெனத் தூண்டினான். உன் பொண்டாட்டி பேரென்ன?...’       “ ”ம்....இன்னாத்துக்குக் கேக்கற?...சுகந்திமேய்ச்சலிலிருக்கும் ஒரு ஆட்டுக்குட்டி போல் தன்னிச்சையாக முத்துராமின் பதிலிருந்தது. அழகாயிருப்பாளா?’         ‘..ம்
சம்பத்தின் ஆர்வம் எதை நோக்கிச் செல்லுமென்பதை புரிந்து ராம் கண்கள் மூடியபடியே சிரித்துக் கொண்டான். ‘பாடு ஏண்டா சுத்தி வளச்சு கேக்கற?...என் பொண்டாட்டிய சாமன் போடத்தானக் கேக்கற....? கோபமாகவுமில்லாமல் திட்டுவதாகவுமில்லாமல் சாதாரணமாயிருந்தது இவனின் குரல். பதிலுக்கு சம்பத்தும் சிரித்தான். கொஞ்சம் சங்கடமாக்க்கூட இருந்தது அவன் இப்படிக் கேட்டவிதம். தப்பிக்கிற வழி தெரியாமல் தன் வேகத்தை அதிகப்படுத்தி இயங்கினான். பேச்சு குறைந்து ராமின் சத்தம் மட்டுமே இப்பொழுது எழுந்தது.
            இருவரும் தளர்ந்து விலகி நின்ற பொழுது பெருச்சாளி ஒன்று வேகமாய் அவர்களைக் கடந்து போனது. அந்த ராத்திரியில் சற்றுத்தள்ளி குப்பைகளை மேய்ந்து கொண்டிருந்த பன்றிகளின் அருவருப்பான உறுமல் இவர்களை எந்தவித்ததிலும் தொந்தரவு செய்திருக்கவில்லை. தன் கர்ச்சீஃபால் சம்பத்தின் குறியைத் துடைத்துவிட்டபடியே ‘தெனம் ஒருத்தனுக்கு சூத்து காட்டினு இருக்கேன்...அவ்ளோ பேரும் என் வூட்டுக்காரியோட படுக்கனும்னா எங்க போறது?...’  சம்பத்தால் சிரிக்க முடியவில்லை.  ‘உன் நெம்பர் குடு, நானே ஒரு நா வீட்டுக்குக் கூப்படறேன்...மறக்காம காலைல குஞ்சுல எலுமிச்சம்பழம் தேயி...சொல்லிவிட்டு இவன் எண்ணை வாங்கிக்கொண்டான். அவன் குனிந்து தன் பேண்ட்டை எடுத்துப் போட்டுக்கொள்ளும் வரை அமைதியாய் கவனித்த சம்பத்திற்கு கடைசி சில நிமிட உரையாடல் சந்தோசமளிக்காததால்  எதுவும் பேசாமல் அப்படியே கிளம்பிப் போவதுதான் சரியாயிருக்குமெனப் பட்டது. அவன் போன சில நிமிடங்களுக்குப் பின் தாம்பரம் பேருந்து நிலையம் நோக்கி வேகமாய் நடந்தான். மெல்லிய குளிர்க்காற்று உடல் முழுக்க இப்பொழுது நிரம்பியோடியதில் கொஞ்சம் ஆறுதலாய் உணரமுடிந்தது. பாதி வழியில் நின்று சிறுநீர்க் கழித்தான். சில நொடிகள் கடுமையான எரிச்சலுக்குப்பின் கொஞ்சமாய் சிறுநீர் வந்தது. கால்கலில் தெறித்த மூத்திரப்புள்ளிகளைத் துடைத்துவிட்டு ஆட்டோவிற்காக வந்து நிற்கையில் ஒரு மணியாகியிருந்தது. சாலையின் எதிர்ப்பக்கத்தில் முத்துராம் ஒரு ஆட்டோவை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தான். வேகமாகக் கடந்து செல்லும் பேருந்துகளின் விளக்கு வெளிச்சங்கள் மஞ்சள் நிறப் பூச்சிகளென பறந்து மறைந்தன.   பார்சல் கேட்டிருந்த பார்ட்டியை அலைபேசியில் அழைத்தான். குறியின் அடியில் சின்னதாய் நமைச்சலும் வலியுமிருப்பது போலிருக்க பல்லைக் கடித்துக் கொண்டு ஆட்டோவிலிருந்து பார்வையை விலக்கிக் கொண்டான்.



Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு